இந்த பாறுக்கழுகுகள் கடந்த இருபது வருடங்களுக்கு முன்பு
வரை மனிதர்கள் வாழும் கிராம பகுதிகளில் இறந்து கிடந்த விலங்குகளை
உண்பதற்கும், சுற்றுசூழல் துப்புரவுகளாக பரவலாக காணப்பட்டன. இன்றைக்கு
அழிந்து வரும் ஆபத்தான உயிரினங்களின் பட்டியலில் இடம் பிடித்து விட்டது.
காரணம் நாம் வளர்க்கும் கால்நடைகளுக்கு போடப்படும் வலிநீக்கி மருந்தான
(Diclofenac) டை குளோப்பினாக் தான் என்பதை உலகம் முழுவதும் உள்ள
ஆராய்சியாளர்கள் உறுதிப்படுத்தி, பத்து ஆண்டுகளுக்கு முன்பே பல நாடுகளில்
தடையும் செய்யப்பட்டது. நம் நாட்டில் தடை செய்யப்பட்டு ஆறு வருடங்கள்
ஆனாலும் இன்றைக்கும் கால்நடை மருத்துவர்களால் பரவலாக பயன்படுத்தபடுகிறது.
ஏழை எளிய மக்கள் நிறைந்த நம் நாட்டில், மனிதர்களே குறைந்த செலவில்
மருத்துவம் நாடி, தேடிப் போகும் போது, தாங்கள் வளர்க்கும் கால்நடைகளுக்கு
அதிக விலையுள்ள மருந்துகளை வாங்கும் நிலைமை இல்லாத போது, டை குளோப்பினக்
(Diclofenac) போன்ற மருந்துகளை எளிதில் பயன்படுத்துகின்றனர். மக்களிடம் ஏற்ற தாழ்வுகளும், அறியாமையும் மிகுந்துள்ள நிலையில், மறுபுறம் இயற்கையை காப்பாற்றுவது போன்ற
சிக்கலான நிலைகளில் நண்பர் பாரதிதாசன் போன்ற இயற்கைவாதிகளின் சேவை மற்றும் களப்பணிகள் சாதாரணமானது அல்ல.
12-2-2013 The Hindu நாளிதழில் வந்த செய்தி
http://www.thehindu.com/12-2-2013 The Hindu நாளிதழில் வந்த செய்தி
The Hindu : NATIONAL / TAMIL NADU : Vulture population stabilising in Moyar Valley
No comments
Welcomes you to Nature for Future - A.M.AMSA