மாந்தரின் சுயநலம் இன்று மனம் போன போக்கில் விளையாடி இயற்கையின் ஒழுகமைப்பு சிதைய தொடங்கி சுற்றுசுழல் கெட்டு அழிவது கண்கூடாகி விட்டது. நம் தொன்மையான காடுகள் விரைவாக அதன் அசலான தன்மையை இழந்து விட்டன. நமது வாழ்வின் பண்பாட்டு அடையாளங்களான விலங்குகள் வாழிடமின்றி சிக்கிச் சிதறி அழிகின்றன. வற்றாதநீர்நிலைகள்,ஆறுகள்எல்லாம்விரைந்துருண்டுசாக்கடையாகிவிட்டன. தவளைக் குஞ்சுகள் கூட கவலைகிடமாகிவிட்டன.
பொருள் உற்பத்தி, மூடநம்பிக்கை என்ற பார்வைகளில் நீலவானம் புகைபடிந்து கரிப்பிடித்துவிட்டது. அடங்காமக்கட்தொகை எங்கும் பரவி காணி நிலம் நம் கால்களால் மிதிபட்டு கசங்கி போய்க்கொண்டு இருக்கிறது. இவற்றை எல்லாம் உணர்தீர்களா? ஆம் எனில் இவற்றை தடுக்க இன்று வரை உங்களது பங்களிப்புதான் என்ன?அல்லது எறிகிற வீட்டில் பிடுங்கியது என்ற இலாபக்கணக்கா?வேண்டாம் மடியறுத்து பால் சாப்பிடும் கொடுமை.
காட்டுயிர் .
No comments
Welcomes you to Nature for Future - A.M.AMSA